விமானக் கண்காட்சியில் பங்கேற்க எகிப்து சென்றடைந்தது இந்தியாவின் சாரங் குழு!
எகிப்து: சர்வதேச விமானக் கண்காட்சியில் பங்கேற்பதற்காக, இந்திய விமானப் படையின் சாரங் குழு எகிப்து சென்றடைந்தது.
எகிப்தின் எல் அலாமைன் சர்வதேச விமான நிலையத்தில் செப்டம்பர் 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை சர்வதேச விமானக் கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த விமானக் கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விமானப்படை வீரர்கள் பங்கேற்க இருக்கின்றனர்.
அந்த வகையில், இந்திய விமானப் படையின் சாரங் குழுவும் இந்த விமானக் கண்காட்சியில் பங்கேற்க இருக்கிறது. இதற்காக, இந்திய விமானப்படையின் சாரங் ஹெலிகாப்டர் சாகசக் குழு எகிப்து சென்றடைந்தது.

