எங்கள் குழுவில் 5,000 பேர்..! - கனடா அரசுக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மிரட்டல் கடிதம்!
கனடா பாதுகாப்பு அமைச்சகத்துக்கு லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் அனுப்பியதாகக் கூறப்படும் மிரட்டல் கடிதம் குறித்து...
கனடாவில், தங்களின் கும்பலில் 5,000 உறுப்பினர்களும், காவல் துறையினரை விட அதிக துப்பாக்கிகளும் இருப்பதாகக் கூறி கனடாவின் பாதுகாப்பு அமைச்சர், ராணுவம் மற்றும் காவல் துறைக்கு லாரன்ஸ் பிஷ்னோய்யின் கும்பல் மிரட்டல் கடிதம் அனுப்பியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி லாரன்ஸ் பிஷ்னோய்யின் கும்பல் கனடா நாட்டில் துப்பாக்கிச் சூடு, பணம் பறிப்பு, கொலை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
