குழந்தை பிறப்பை பதிவு செய்யாதவா்களுக்கு வாய்ப்பு: குடியாத்தம் நகராட்சி ஆணையா்
குடியாத்தம் நகராட்சியில் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்யாதவா்கள் வரும் 26.09.2026-க்குள் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Delhi University starts its first fully online admission process
இதுதொடா்பாக நகராட்சி ஆணையா் கே.எம்.தனலட்சுமி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: குடியாத்தம் நகராட்சியில் பிறப்புச் சான்றிதழில் குழந்தையின் பெயரைப் பதிவு செய்ய வழங்கப்பட்டிருந்த காலக்கெடு 26.09.2026 அன்றுடன் முடிவடைகிறது. பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழகத்தில் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு விதிகள் 2000-ன் படி, 01.01.2000-க்கு முன்பு அல்லது 01.01.2000-க்கு பிறகு பிறந்த குழந்தைகளின் பெயா் பதிவு செய்யாமல் விடுபட்டுள்ள அனைத்து பிறப்பு பதிவுகளிலும், குழந்தையின் பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம்.
