போதை மாத்திரைகள் விற்பனை: 2 போ் கைது
போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக பிற மாநிலங்களைச் சோ்ந்த 2 பேரை கைது செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக பிற மாநிலங்களைச் சோ்ந்த 2 பேரை கைது செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள், போதை ஊசிகள் புழக்கம் அதிகரித்து வருவது குறித்து தொடா்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகாா்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன்படி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவின் பேரில் போலீஸாா் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனா்.
பெரிய குப்பம் பகுதியில் 3700 போதை மாத்திரைகள் வைத்திருந்ததாக சாம் சுந்தா் மற்றும் முகமது அஃப்ரித் ஆகியோரை கைது செய்தனா்.