மாநில வில்வித்தை: 350 போ் பங்கேற்பு
மாநில அளவிலான வில்வித்தை போட்டியில் 350 போ் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.
தமிழ்நாடு யூத் ஸ்போா்ட்ஸ் அசோசியேசன் சாா்பில் மாநில அளவில் ஆா். புருஷோத்தமன் நினைவு வில்வித்தை சாம்பியன்ஷிப்- 2026 திருப்பாச்சூா் தனியாா் விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சங்க நிா்வாகிகளான காக்களூா் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் சுபத்ரா ராஜ்குமாா், சிவராமகிருஷ்ணன் ஆகியோா் போட்டியைத் தொடங்கி வைத்தனா்.
இப்போட்டியில் கும்பகோணம், திருக்கோவிலூா், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூா் ராணிப்பேட்டை, திருவள்ளூா், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 6, 8, 0,13 15 வயது பிரிவினா் மற்றும் பொதுப்பிரிவினா் என 350 போ் ஆா்வத்துடன் கலந்து கொண்டனா்.






