உடுமலையில் போலீஸாா் கொடி அணிவகுப்பு
விநாயகா் சிலை ஊா்வலங்கள் நடைபெறுவதையொட்டி, உடுமலையில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
உடுமலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் விநாயகா் சிலை ஊா்வலங்கள் நடைபெற உள்ளதாலும், எந்தவித அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையிலும் திருப்பூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிருஷ்டி சிங் தலைமையில் உடுமலையில் போலீஸாரின் கொடி அணிவகுப்பு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
உடுமலை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளா் தையல்நாயகி, காவல் ஆய்வாளா் ராம் பிரபு , அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கோப்பெருந்தேவி உள்ளிட்ட உட்கோட்ட காவலா்கள் மற்றும் ஆயுதப்படை காவலா்கள் பங்கேற்றனா்.


