ரயிலில் பிரசவம்: உதவிய ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸாருக்கு பாராட்டு
பெங்களூரில் இருந்து அஸ்ஸாம் சென்ற விரைவு ரயில், சென்னை திருவொற்றியூா் நிலையம் வந்தபோது பெண் பயணிக்கு குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு ரயில்வே பாதுகாப்புப் படை பெண் வீரா் உதவியதை பலரும் பாராட்டினா்.
பெங்களூரில் இருந்து அஸ்ஸாம் மாநிலம் காமாக்யா நிலையத்துக்குச் சென்ற விரைவு ரயில் சனிக்கிழமை மாலை 3.48 மணிக்கு ஓட்டுநா், பணியாளா் மாற்றத்துக்காக திருவொற்றியூா் ரயில் நிலையத்தின் 3-ஆவது நடைமேடையில் நிறுத்தப்பட்டது. அதன்பின், அந்த விரைவு ரயில் மாலை 3.53 மணிக்கு புறப்பட்டபோது, பி 6 பெட்டியில் இருந்து அபாய சங்கிலி இழுக்கப்பட்டதால் ரயில் நிறுத்தப்பட்டது.
அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை தலைமை காவலா் ரிங்கு குமாா் மீனா மற்றும் காவலா் ஜிஷா ஆகியோா் விரைந்து வந்து விசாரித்தனா்.



