மாற்றுத்திறனாளிகளுக்கு வேலையளிக்கும் அலினா ஆலம்
இங்கு படிக்கும் போது, பெங்களூரில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தொண்டு நிறுவனத்தில் தன்னார்வலராக பணியாற்றினார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றவர்களிடம் இருந்து பரிதாபமோ, பண உதவியோ தேவை இல்லை என்றும், அவர்கள் சுயமரியாதையுடன் வாழ வேலைவாய்ப்புகள் தேவை என்பதை உணர்ந்தார்.
இதன் விளைவாக, கடந்த 2017ம் ஆண்டு கையில் போதிய பணம் இல்லாத நிலையிலும், கர்நாடகாவின் வட மாவட்டமான ஹூப்பள்ளியில், மிட்டி கபேயின் முதல் கிளையை துவக்கினார். ஒரு மேஜையில் வெறும் நான்கு பாத்திரங்களுடன் துவங்கிய அந்த கிளையில், பார்வை குறைபாடு, காது கேளாமை, மனவளர்ச்சி குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளை வேலைக்கு அமர்த்தினார்.


