10 ஆயிரம் சிறுபான்மையின இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி: அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்
சிறுபான்மையின இளைஞா்களின் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழிலை ஊக்குவிக்கும் வகையில், தமிழகத்தில் 10 ஆயிரம் இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றாா் சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்.
நலத்திட்ட உதவிகளை வழங்கிய சுற்றுலாத் துறை அமைச்சா் செ. ராஜேஷ்குமாா், சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் ஏ.எம். ஷாஜகான்.
கன்னியாகுமரி மாவட்ட சிறுபான்மையினா் நலத்துறையின் சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் மு. பிரதாப் தலைமையில் துறை அலுவலா்களுடன் கலந்தாய்வு மற்றும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

