மிஸ்டர் மூளைக்காரன் ஜீவா சொல்லும் சர்க்காரியா சம்பவம்
ஜீவா... 'கார்கில் போர்ல வீரமரணம் அடைஞ்ச நம்ம வீரர்கள் குடும்பத்துக்காக, மும்பை கொலாபா கடற்கரையில வீடு கட்டின திட்டத்துல முறைகேடு நடந்தப்போ, மஹாராஷ்டிராவுலேயும், மத்தியிலேயும் ஆட்சியில இருந்த கட்சி எது; அந்த ஊழல் பேரு என்ன'ன்னு இந்த அன்பு பய சைக்கிள் ஸ்டாண்டுல வைச்சு என்னை கேட்டுட்டான்டா...
அய்யய்யோ... நீ என்னடா சொன்னே?
எனக்கெப்படி அது தெரியும் ஜீவா; அதான், 'பேசிப் பழகிய பொய், வாங்கிப் பழகிய கை, போட்டுப் பழகிய பை'ன்னு நம்ம முதல்வர் தி.மு.க.,வைப் பத்தி, சொன்னதை சொல்லிட்டு ஓடியாந்துட்டேன்; நான் ஓடி வர்றப்போ, 'டேய் பக்கடா... அப்போ மத்தியிலேயும், மாநிலத்துலேயும் ஆட்சியில இருந்தது காங்கிரஸ்டா; அந்த ஊழல் பேரு... 'ஆதர்ஷ் வீடு ஒதுக்கீட்டு ஊழல்டா'னு தொண்டை கிழிய அன்பு கத்துனான்!

