கோவிலில் திருட்டு வழக்கில் 7 ஆண்டுக்கு பின் கைது
மங்களூரு: கோவில் திருட்டு வழக்கில், 7 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை, மங்களூரு போலீசார் தமிழகத்தில் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து, மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சுதீர்குமார் ரெட்டி, நேற்று அளித்த பேட்டி:
மங்களூரின், முல்கி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கோவிலில், கடந்த, 2018ல் திருட்டு நடந்தது. இதுகுறித்து, முல்கி போலீசார் பல கோணங்களில், விசாரணை நடத்திய போது, கோவில் திருட்டில் நாகராஜன், 38, என்பவருக்கு தொடர்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

