ஜம்பையில் 3 நாள்களாக மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல்
பவானியை அடுத்த ஜம்பையில் கடந்த 3 நாள்களாக மின் விநியோகம் தடைபட்டதால் பொதுமக்கள் வியாழக்கிழமை காலை, மாலை என இரண்டு முறை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
பவானி வட்டாரத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வீசிய பலத்த காற்று, மழையால் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியா்கள் படிப்படியாக மின் விநியோகத்தை சீராக்கிய நிலையில் ஜம்பை பேரூராட்சியின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் வழங்கப்படவில்லை.
