அடுத்த 3 மணிநேரத்துக்கு 22 மாவட்டங்களில் மழை!
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
''தமிழ்நாட்டில் அடுத்த 3 மணிநேரத்துக்கு (இரவு 7 மணி வரை ) சேலம், பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தருமபுரி, ஈரோடு மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, விழுப்புரம், மதுரை, திருப்பூர், கோவை, திருவண்ணாமலை மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.






