பள்ளிப் பேருந்தில் குழந்தைகளை அனுப்பும் பெற்றோருக்கு ஓர் எச்சரிக்கை!
பள்ளிப் பேருந்தில் தங்களது சிறு குழந்தைகள் அல்லது பிள்ளைகளை அனுப்பும் பெற்றோருக்கு ஓர் எச்சரிக்கையாக வந்திருக்கும் செய்தி..
நவி மும்பையில் பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த 3 வயது குழந்தையை, பேருந்து ஓட்டுநர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கமோதி என்ற பகுதியில், குற்றத்தில் ஈடுபட்ட பேருந்து ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட குழந்தைதான், பள்ளிப் பேருந்தில் கடைசியாக இறங்கும் குழந்தை என்பதால், அனைத்துப் பிள்ளைகளும் இறங்கியதும், பேருந்திலேயே குழந்தையை, பேருந்து ஓட்டுநர் வன்கொடுமை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

