’முதல் தமிழ் நடிகர்..’ தமிழ்சினிமாவில் இது நடந்ததே இல்லை! விட்ட இடத்தை பிடிக்கும் SURIYA!
விஜய், அஜித் இடையே நம்பர் 1 ரேஸில் இருந்த சூர்யா, அஞ்சான் முதல் கங்குவா வரை தொடர்ச்சியான தோல்வியால் தியேட்டர் கம்பேக் இழந்தார். இந்த பின்னணியில் கருப்பு, விஸ்வநாத் & சன்ஸ் 250 கோடிக்கு மேல் வசூலித்து பழைய விண்டேஜ் சூர்யா மீண்டும் வந்திருப்பதை நிரூபித்தது.
ஒரு நேரத்தில் விஜய், அஜித் இருவருக்கும் போட்டியாக நம்பர் 1 இடத்திற்கான ரேஸில் இருந்த நடிகர் சூர்யா, பல ட்ரெண்ட் செட்டிங் படங்களை கொடுத்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை அமைத்துக்கொண்டார். எந்த ரோல் கொடுத்தாலும் அவரால் செய்ய முடியும் என்ற இடத்தில் இருந்த சூர்யாவிற்கு முதல் சறுக்கலாக அமைந்தது அஞ்சான் திரைப்படம். மிகப்பெரிய ஹைப் உடன் வெளியாகி பெரிய டிசாஸ்டராக மாறியது அத்திரைப்படம். அதற்குபிறகு அவர் நடித்து தியேட்டரில் வெளிவந்த மாசு என்கிற மாசிலாமணி, தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே, எதற்கும் துணிந்தவன் என அனைத்து படங்களும் ’இதுதான் சூர்யாவின் கம்பேக் திரைப்படம்’ என்ற அனைத்து எதிர்ப்பார்ப்புகளையும் ஏமாற்றங்களாகவே மாற்றியது. அதிலும் பலகோடி ரூபாய் செலவில் உருவாகி மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை கிளப்பிய ‘கங்குவா’ திரைப்படம், சூர்யாவின் சினிமா கரியரிலேயே மிகமோசமான விமர்சனத்தை சந்தித்து பெரிய பெயிலியர் மூவியாக மாறியது.
இதற்கிடையில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய் பீம் போன்ற திரைப்படங்கள் நல்ல விமர்சனத்தையும், விருதுகளை வென்றாலும் அவை ஒடிடியில் வெளியான படங்கள் என்பதால், அது அவருடைய தியேட்டர் கம்பேக்காக மாறவில்லை.

