பாலஸ்தீனத்தை அழிக்கும் நோக்கில் இஸ்ரேல்: மனித உரிமைகள் அமைப்பு குற்றச்சாட்டு!
பாலஸ்தீன மக்களை தனிமைப்படுத்தி ஒழிப்பதற்கான பெரிய திட்டத்தை இஸ்ரேல் தீட்டுவதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்தது.
மேற்குக் கரையின் புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பாலஸ்தீனிய - பெடோயின் இல்லத்திற்கு வெளியே நடமாடும் இஸ்ரேலியக் குடியேறிகள். - AP
பாலஸ்தீன மேற்கு கரையை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலின் நடவடிக்கைகள், பாலஸ்தீன மக்களை தனிமைப்படுத்தி ஒழிப்பதற்கான பெரிய திட்டத்தின் ஒரு பகுதி என இஸ்ரேலை மையமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமைகள் அமைப்பான பிஸெலெம் தெரிவித்துள்ளது.


