ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 7,000 கனஅடியாக அதிகரிப்பு: பரிசல் இயக்க மீண்டும் தடை
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 7,000 கனஅடியாக அதிகரித்ததால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தற்காலிகத் தடைவிதிப்பதாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.
நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பரிசல்கள். - கோப்புப்படம்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 7,000 கனஅடியாக அதிகரித்ததால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு தற்காலிகத் தடைவிதிப்பதாக மாவட்ட ஆட்சியா் வே. சரவணன் தெரிவித்துள்ளாா்.


