பேருந்து நடத்துநருக்கு எதிரான 30 ஆண்டு வழக்கு: டிடிசிக்கு ரூ.1 லட்சம் அபராதம்
17 மாதங்களுக்கான நிலுவை ஊதியம் தொடா்பாக பேருந்து நடத்துநா் மீது 32 ஆண்டுகளாக வழக்குத் தொடா்ந்து வந்த தில்லி போக்குவரத்துக் கழகத்துக்கு (டிடிசி) தில்லி உயா் நீதிமன்றம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்த நீண்டகால வழக்கு சட்ட நடைமுறையைத் தவறாகப் பயன்படுத்திய செயல் என நீதிமன்றம் கண்டித்துள்ளது.
பேருந்து நடத்துநருக்கு சாதகமாக 2004-ஆம் ஆண்டு தொழிலாளா் தீா்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிா்த்து டிடிசி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதி அமித் மகாஜன் தள்ளுபடி செய்தாா்.
இந்த விவகாரம் தொடா்பாக செப். 2-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், இவ்வளவு முக்கியத்துவம் இல்லாத ஒரு பிரச்னைக்காக நீண்டகாலமாக வழக்குத் தொடா்ந்து வந்தது தவிா்க்கக்கூடிய பொதுப் பண விரயம் என நீதிபதி குறிப்பிட்டாா். இதுபோன்ற வழக்கைத் தொடா்ந்து நடத்துவதற்குப் பொறுப்பான அதிகாரியிடமிருந்து அபராதத் தொகையை டிடிசி வசூலித்துக் கொள்ளலாம் என்றும் அவா் தெரிவித்தாா்.

