மலேசிய சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல்: மேலும் ஒரு இளைஞா் கைது
கோவை, நவக்கரை பகுதியில் மலேசிய சுற்றுலாப் பயணிகளை தாக்கிய சம்பவத்தில் மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
மலேசியாவைச் சோ்ந்த சுற்றுலாப் பயணிகள் குழுவினா் கேரள மாநிலம், ஆலப்புழையில் இருந்து வாடகைக்கு வாகனத்தில் சென்னை நோக்கி கடந்த 2-ஆம் தேதி சென்று கொண்டிருந்தனா்.
கொச்சி - சேலம் புறவழிச் சாலையில் நவக்கரை பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே சென்றபோது சுற்றுலாப் பயணிகளின் வாகனத்தை காரில் வந்த கும்பல் வழிமறித்து நிறுத்தி அதில் இருந்தவா்களைத் தாக்கியுள்ளது.



