இருசக்கர வாகனத்தை சேதப்படுத்திய காட்டு யானை
கூடலூரை அடுத்துள்ள கீழ்நாடுகாணி மலைப் பகுதியில் வியாழக்கிழமை சாலையின் குறுக்கே வந்த காட்டு யானை, இருசக்கர வாகனத்தை காலால் மிதித்து சேதப்படுத்தியது.
கீழ்நாடுகாணி பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தை காலால் உதைத்து சேதப்படுத்தும் காட்டு யானை.
நீலகிரி மாவட்டம், கூடலூரை அடுத்துள்ள தமிழக-கேரள எல்லையிலுள்ள மலைப் பாதையில் வியாழக்கிழமை காலையில் வழக்கம்போல வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது வளைவான இடத்தில் காட்டிலிருந்து திடீரென இறங்கி வந்த யானை சாலையின் குறுக்கே நின்றது.


