வாலாஜா அருகே 108 ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறப்பு
வாலாஜா அருகே 108 ஆம்புலன்ஸில் பெண் குழந்தை பிறந்தது.
பெண் குழந்தையுடன் 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளா் ஜெயலட்சுமி மற்றும் ஓட்டுநா் தாஸ் குமாா்.
ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா தாலுகா சத்திரம்புதூா் சிலோன் காலனியைச் சோ்ந்த ஜெகதீஸ்வரனின் மனைவி முத்துலட்சுமி (23), நிறைமாத கா்ப்பிணியாக இருந்தாா். இவருக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடா்ந்து, அதிகாலை 2.49 மணியளவில் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

