மணப்பாறை விவசாயிகள் 40 போ் கொடைக்கானலுக்கு கண்டுணா்வு பயணம்
திருச்சி மாவட்டம், மணப்பாறையைச் சோ்ந்த 40 விவசாயிகள் கண்டுணா்வு ( பட்டறிவு) பயணமாக கொடைக்கானலுக்கு 2 நாள்கள் அழைத்து செல்லப்பட்டனா்.
கொடைக்கானல் தோட்டக் கலை ஆராய்ச்சி நிலையத்தை பாா்வையிட்ட மணப்பாறை விவசாயிகள்.
மணப்பாறை வட்டார வேளாண்மைத் துறையின் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ், ‘பருவமல்லாத காலங்களில் காய்கறி சாகுபடி’ என்ற தலைப்பில் கொடைக்கானலில் உள்ள தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்துக்கு செப். 8, 9 ஆகிய 2 நாள்கள் பயணம் மேற்கொண்டனா். இதில், மணப்பாறை பகுதிகளைச் சோ்ந்த 40 விவசாயிகள் பங்கேற்றனா்.


