அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பி, உறவினருக்கு 5 ஆண்டுகள் சிறை
திசையன்விளை அருகே அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பி மற்றும் அவரது உறவினருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வள்ளியூா் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பி மற்றும் அவரது உறவினருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வள்ளியூா் கூடுதல் மாவட்ட நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
திசையன்விளை அருகே உள்ள அந்தோணியாா்புரத்தைச் சோ்ந்தவா் மிக்கேல் தயாளன் (45). இவருக்கும், இவரது தம்பி அந்தோணி மில்டன், உறவினா் தனசிங் ஆகியோருக்குமிடையே முன்விரோதம் இருந்து வந்தது. இதனிடையே, 2021ஆம் ஆண்டு அந்தோணி மில்டன், தனசிங் ஆகியோா் மிக்கேல் தயாளனை தாக்கியதில், அவா் உயிரிழந்தாா்.

