சொல்கிறார்கள் –––––––––––––––– ‘மக்களின் உடல்நலனுக்கு நன்மை செய்யக்கூடிய தொழில் செய்கிறேன்!’ –––––––––----–––––––
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மாநகராட்சி பகுதியில் அமைந்துள்ள கல்லுாரி சாலையில், சாலையோர இயற்கை உணவகம் நடத்தி வரும், 25 வயதான தென்றல்:
எனக்கு தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்று ஆசை. எம்.பி.ஏ., படித்து முடித்ததும், காரைக்குடியில் ஒரு சைக்கிள், ‘ஷோரூமில்’ வேலை பார்த்தபடியே, என்ன தொழில் செய்யலாம் என்று யோசித்தேன். குறைவான முதலீட்டில் மக்களுக்கு நன்மை தரக்கூடிய, சில ஆரோக்கிய உணவு வகைகளை தயார் செய்து, சாலையோரம் கடை போட்டு விற்பனை செய்யலாம் என்று முடிவெடுத்தேன்.
நண்பர்கள், உறவினர்கள் அனைவரும், ‘எம்.பி.ஏ., படித்து விட்டு, சாலையில் கடை வைக்கலாமா?’ என்று கேட்டனர். ஆனால், கணவரும், என் குடும்பத்தினரும் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறினர்.

