ஊழலை வெளிக்கொண்டு வந்த முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள்: தமிழிசை சௌந்தரராஜன்
காஞ்சிபுரத்தில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அளித்த பேட்டி பற்றி....
கடந்த கால ஆட்சியின் ஊழல்களை வெளிப்படைத்தன்மையுடன் வெளிப்படுத்திய முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் முன்னாள் சேர்மன் கே.டி.எஸ். மணியின் நூறாவது பிறந்த நாளையொட்டி, இந்து கல்வி அறக்கட்டளை சார்பில் காஞ்சிபுரத்தில் 11 ஏழை, எளிய ஜோடிகளுக்குத் திருமணம் செய்து வைத்து, அவர்களுக்குத் தேவையான சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி, அறக்கட்டளைத் தலைவர் அருண்குமார் தலைமையில் நடைபெற்றது.





