14-ந் தேதிக்கு பிறகு உதவித்தொகை வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
தஞ்சாவூர்,நிதி வருமா? நிறுத்திவிட்டார்களா? என்ற அச்சம் தேவையில்லை. 19.27 லட்சம் பேருக்கு 14-ந் தேதிக்கு பிறகு உதவித்தொகை வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன்
நிதி வருமா? நிறுத்திவிட்டார்களா? என்ற அச்சம் தேவையில்லை. 19.27 லட்சம் பேருக்கு 14-ந் தேதிக்கு பிறகு உதவித்தொகை வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 23 மண்டலங் களாக புயல் வர இருக்கிறது. அதில் 3 மண்டல புயல்கள் பெரும் வெள்ளத்தை உருவாக்க இருக்கின்ற நிலை உருவாகப் போகிறது. இது எல் நினோ நிபுணர் குழு கொடுத்த பட்டியல் ஆகும். சமூக நலத்திட்டத்தின் அடிப்படையில் இதுவரைக்கும் 35 லட்சத்து 37 ஆயிரம் பேருக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.1,000, ரூ.1,500 வழங்கிக்கொண்டு இருக்கிறோம்.

