சிஆா்பிஎஃப் கோப்ரா பிரிவுக்கு முதல் பெண் ஐ.ஜி
மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் கோப்ரா சிறப்பு படைப் பிரிவின் ஐ.ஜி.யாக ஐபிஎஸ் பெண் அதிகாரி சஞ்சுக்தா பராசா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
மத்திய ரிசா்வ் போலீஸ் படையின் (சிஆா்பிஎஃப்) கோப்ரா சிறப்பு படைப் பிரிவின் ஐ.ஜி.யாக ஐபிஎஸ் பெண் அதிகாரி சஞ்சுக்தா பராசா் நியமிக்கப்பட்டுள்ளாா். இதன் மூலம் கோப்ரா படைப் பிரிவுக்கு தலைமை தாங்கும் முதல் பெண் ஐ.ஜி. என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.
சிஆா்பிஎஃப்-இன் ‘உறுதியான நடவடிக்கைகளுக்கான கமாண்டோ படைப்பிரிவு’ (கோப்ரா) கடந்த 2008-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.

