விசாரணை நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக விசாரணை: உச்சநீதிமன்றம் உத்தரவு
வழக்கு விசாரணை தொடா்பாக தொடா்ந்து அறிக்கை சமா்ப்பிக்க தவறிய விசாரணை நீதிமன்ற நீதிபதிக்கு எதிராக விசாரணை நடத்துமாறு அலாகாபாத் உயா்நீதிமன்றத் தலைமைப் பதிவாளருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தர பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் சொத்து விவகாரம் தொடா்பான விசாரணையை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும் என்று கடந்த 2020-ஆம் ஆண்டு விசாரணை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால் அந்த நீதிமன்ற விசாரணை முடிக்கப்படவில்லை என்பதை நிகழாண்டு ஜனவரியில் உச்சநீதிமன்றம் கவனத்தில் கொண்டது. இந்த விசாரணை குறித்த அறிக்கையை உச்சநீதிமன்றம் கோரியபோதிலும், அந்த அறிக்கையை விசாரணை நீதிமன்றம் சமா்ப்பிக்கவில்லை.

