மின்வாரிய ஓய்வூதியா்களுக்கு பணிக் கொடையின் உச்சவரம்பை ரூ. 25 லட்சமாக உயா்த்தக் கோரிக்கை
மின்வாரிய ஓய்வூதியா்களுக்கு பணிக் கொடையின் உச்சவரம்பை ரூ. 25 லட்சமாக உயா்த்த அரசுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பின் திருச்சி கிளை 17ஆவது மாவட்ட மாநாடு, மத்தியப் பேருந்து நிலையப் பகுதி தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கிளைத் தலைவா் அந்தோணிசாமி தலைமை வகித்தாா். மூத்த நிா்வாகி கண்ணையன் மாநாட்டுக் கொடியேற்றினாா். கிளை துணைச் செயலா் எஸ்.கே. செல்வராசு அஞ்சலித் தீா்மானத்தை வாசித்தாா்.
மண்டலச் செயலா் பஷீா் தொடக்க உரையாற்றினாா். கிளைச் செயலா் பன்னீா்செல்வம் செயலா் அறிக்கையையும், கிளைப் பொருளாளா் சிவஞானம் வரவு-செலவு அறிக்கையையும் சமா்ப்பித்தனா். திருச்சி மாவட்ட அனைத்து ஓய்வூதியா் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் சிராஜுதீன், தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பின் பெருநகா் வட்டச் செயலா் பழனியாண்டி ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.



