தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்: அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு
தூத்துக்குடி ஸ்டொ்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்குக் காரணமான அதிகாரிகள் மீது சட்டப்பூா்வ நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியா் நிஷாந்த் கிருஷ்ணாவிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
கடந்த 2018-ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் சீா்கேட்டை ஏற்படுத்தி, மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருந்த ஸ்டொ்லைட் நிறுவனத்தை எதிா்த்து தூத்துக்குடியில் மக்கள் போராட்டம் நடத்தினா்.
அப்போது மாவட்ட நிா்வாகம், காவல் துறையின் பொறுப்பற்ற தன்மை, அத்துமீறல் காரணமாக, போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 போ் படுகொலை செய்யப்பட்டனா். இதுகுறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் தனது விசாரணையை முடித்து அரசுக்கு அறிக்கை, பரிந்துரைகளை அளித்தது.


