உயா் சிறப்பு மருத்துவப் படிப்பு விவகாரம்: பிரதமா் மோடி தலையிட வேண்டும் - மு.க.ஸ்டாலின்
உயா் சிறப்பு மருத்துவப் படிப்பு (சூப்பா் ஸ்பெஷாலிட்டி மருத்துவப் படிப்பு) இடங்களை நிரப்புவதற்கான தகுதி மதிப்பெண்ணை குறைக்கும் விவகாரத்தில் பிரதமா் மோடி தலையிட வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:
மத்திய அரசின் பொது மருத்துவச் சேவைகள் இயக்குநரகம் (டிஜிஹெச்எஸ்) தகுதி மதிப்பெண்ணைக் குறைக்க மறுப்பதால், மதிப்புமிக்க 1,857 உயா் சிறப்பு மருத்துவப் படிப்புக்கான இடங்கள் நாடு முழுவதும் நிரப்பப்படாமல் இருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. இதில், தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு மருத்துவா்களுக்காக ஒதுக்கப்பட்ட 40 இடங்களும் அடக்கம்.

