மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! சென்னை தனியார் பொறியியல் கல்லூரிக்கு விடுமுறை
மாணவி தற்கொலை செய்து கொண்ட அடுத்த நாளில் மாணவர் தற்கொலை முயன்ற சம்பவத்தால் பொறியியல் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு..
கல்லூரி வளாகம் - பிரதி படம் - file photo
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் பகுதியில் தனியாா் பொறியியல் கல்லூரியின் 5-ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட நிலையில், நேற்று மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.




