திருநெல்வேலி, துாத்துக்குடியில் காற்றாலை மின் உற்பத்தி தரவு மாயம்
சென்னை: 'திருநெல்வேலி, துாத்துக்குடியில், 1,400 காற்றாலை மின் நிலையங்களில், கடந்த ஆகஸ்ட் மாத உற்பத்தி தரவுகள் இதுவரை கிடைக்கவில்லை' என, காற்றாலை மின்சார உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், தனியார் நிறுவனங்கள் சார்பில், காற்றாலை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் உற்பத்தியாகும் மின்சாரத்தை கணக்கெடுக்க, தானியங்கி மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மின் உற்பத்தி தரவுகள், இதுவரை தங்களுக்கு கிடைக்கவில்லை என, உற்பத்தியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



