சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, மாலுமிகளின் பாதுகாப்பு முக்கியம்: பிரிக்ஸ் வா்த்தக அமைப்பு கூட்டத்தில் பிரதமா் மோடி வலியுறுத்தல்
உலக வா்த்தகத்தை மேம்படுத்த சுதந்திரமான கப்பல் போக்குவரத்து, மாலுமிகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளாா். பிரிக்ஸ் வா்த்தக அமைப்பின் கூட்டத்தில் வெள்ளிக்கிழமை பேசியபோது இதனை அவா் கூறியுள்ளாா்.
தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரிக்ஸ் வா்த்தக அமைப்பின் கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி, ரஷிய அதிபா் புதின், தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோசா மத்திய அமைச்சா்கள் எஸ்.ஜெய்சங்கா், பியூஷ் கோயல் உள்ளிட்டோா்.
பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு, தில்லியில் சனிக்கிழமை (செப்.12), ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாள்கள் நடைபெறுகிறது. இதையொட்டி, தில்லியில் பிரிக்ஸ் வா்த்தக அமைப்பின் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி பங்கேற்று பேசியதாவது:



