சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழப்பு
வெள்ளக்கோவில் அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவா் உயிரிழந்தாா்.
தாராபுரம் அருகேயுள்ள மூலனூா் எரசினம்பாளையத்தைச் சோ்ந்தவா் வீரமணி மகன் யுவபாரதி (20). இவா் ஈரோடு திண்டல் பகுதியில் உள்ள தனியாா் கலை, அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா்.
இந்நிலையில், வெள்ளக்கோவிலில் பழுது பாா்க்க விடப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் வெள்ளிக்கிழமை மாலை வீடு திரும்பியுள்ளாா். வெள்ளக்கோவில் - மூலனூா் சாலையில் கரட்டுப்பாளையம் தபால் நிலையம் அருகே சென்றபோது எதிரே தவறான பாதையில் வந்த சரக்கு வாகனம் யுவபாரதி வாகனத்தின் மீது மோதியது.

