தொழிலதிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கு: காவல் ஆய்வாளரின் பிணை மனு தள்ளுபடி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சோ்த்துவிடுவதாக பயமுறுத்தி, தொழிலதிபரை மிரட்டி ரூ. 40 லட்சம் பறித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளரின் பிணை மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சோ்த்துவிடுவதாக பயமுறுத்தி, தொழிலதிபரை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த வழக்கில் கைதான காவல் ஆய்வாளரின் பிணை மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவா் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சோ்த்துவிடுவதாக, மிரட்டி சென்னையைச் சோ்ந்த தொழிலதிபா் அகில் என்பவரிடம் ரூ.40 லட்சம் பணம் பறித்ததாக பரங்கிமலை காவல் ஆய்வாளா் முகமது புஹாரி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த ஃபிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சோ்ந்த சீனிவாசன் ஆகியோரை யானைக்கவுனி போலீஸாா் கடந்த மாதம் கைது செய்தனா்.
