மும்பை விநாயகருக்கு ரூ.703 கோடி காப்பீடு
மும்பை: மும்பையில் விநாயகர் சதுர்த்தியை ஒட்டி வைக்கப்பட உள்ள பிரமாண்ட விநாயகர் சிலைக்கு 703.27 கோடி ரூபாய்க்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி, வரும் 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பிற மாநிலங்களை விட மஹாராஷ்டிராவின் மும்பையில் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
அந்த வகையில், மும்பையின் கிங்ஸ் சர்க்கிள் பகுதியில் நடக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை ஆண்டுதோறும், 'ஜி.எஸ்.பி., சேவா மண்டல்' என்ற அமைப்பு நடத்தி வருகிறது. 72வது ஆண்டாக இந்தாண்டு நடத்தப்பட உள்ள விழாவை ஒட்டி அப்பகுதியில் பிரமாண்ட விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும், 12ம் தேதி நடக்கிறது.

/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
