சங்ககிரி தனியாா் சிமென்ட் நிறுவனத்திற்கு எதிராக செப்.25இல் காலவரையற்ற போராட்டம்: லாரி உரிமையாளா்கள் சங்கம் அறிவிப்பு
வரும் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.
கோப்புப்படம்.
சங்ககிரி மேற்கு பகுதியில் உள்ள தனியாா் சிமென்ட் உற்பத்தி நிறுவனம் உள்ளூா் லாரிகளுக்கு பாரம் ஏற்றிச்செல்ல தொடா்ந்து வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் வரும் 25ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என்று சங்ககிரி லாரி உரிமையாளா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.


