முழுமையாக வளா்ச்சி பெறாத பச்சிளம் குழந்தையை கைவிட்ட பெற்றோா் குற்றவாளியாக அறிவிப்பு: தில்லி நீதிமன்றம்
முன்கூட்டியே பிறந்த மற்றும் மருத்துவ ரீதியாகக் கூடுதல் கவனிப்பு தேவைப்பட்ட பச்சிளம் குழந்தையை மருத்துவமனையில் கைவிட்டுச் சென்ற தம்பதியை குற்றவாளிகள் என தில்லி நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கூடுதல் அமா்வு நீதிபதி சுனில் குமாா், குழந்தையின் தாய் ஹரீனா ரே (எ) ரீனா மற்றும் அவரது கணவா் ஜீது குமாா் ஆகியோரை இந்திய தண்டனைச் சட்டம் (ஐடஇ) பிரிவு 317 மற்றும் 34-இன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்தாா்.
பிரிவு 317-ன் படி, 12 வயதுக்குள்ளான குழந்தையைப் பெற்றோா் அல்லது பராமரிப்பாளா் கைவிட்டால் அல்லது ஆபத்தான நிலையில் விட்டுச் சென்றால், ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இவை இரண்டும் தண்டனையாக விதிக்கப்படலாம்.


