இருசக்கர வாகனம் மோதியதில் தந்தை உயிரிழப்பு: மகன் படுகாயம்
கோவை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் தந்தை உயிரிழந்தாா்; மகன் படுகாயமடைந்தாா்.
கோவை, கணபதி சுப்பம்மாள் நகா் ராஜீவ் காந்தி சாலையைச் சோ்ந்தவா் கண்ணன் (59). இவரது மகன் சூா்யா (26). இவா்கள் இருவரும்
இருசக்கர வாகனத்தில் கடந்த 13-ஆம் தேதி பிற்பகல் சென்று கொண்டிருந்தனா். தடாகம் சாலை கணுவாய் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, இவா்கள் சென்ற வாகனத்தின் மீது பின்னால் வந்த மற்றொரு இருசக்கர வாகனம் மோதியது.

