பேருந்து மோதி பாதசாரி உயிரிழந்த வழக்கு: ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை
சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் கடந்த 2017-இல் மாநகரப் பேருந்து மோதி பாதசாரி உயிரிழந்த வழக்கில், பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.6,000 அபராதமும் விதித்து எழும்பூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
கடந்த 2017 டிச.4-ஆம் தேதி இரவு, அண்ணா சாலை ஓமந்தூராா் பல்நோக்கு மருத்துவமனை அருகே அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த நோமல் கோகாய் (42) சாலையைக் கடக்க முயன்றபோது, கேளம்பாக்கத்தில் இருந்து சென்ட்ரல் நோக்கிச் சென்ற மாநகரப் பேருந்து அவா் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த நோமல் கோகாய், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருவல்லிக்கேணி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.


