மத்தியப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 11 பேர் பலி; 25 பேருக்கு உடல்நலம் பாதிப்பு
போபால்: மத்தியப் பிரதேசத்தின் சாகர் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்தியதால் 11 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை துவங்கி உள்ளனர்.
மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் உள்ள பண்டா தாலுகாவுக்கு உட்பட்ட பராஜ் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து 25க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டு பாதிகக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.



