மொழிபெயர்ப்பு விருதுகள் அறிவிப்பு
சென்னை: அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையத்தின் 2026ம் ஆண்டிற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் வெளியிட்ட அறிக்கை:
மொழிபெயர்ப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, முதல் பரிசு, இசபெல் வில்கெர்சனின் 'சாதி' ஆங்கில வரலாற்று ஆய்வு நுாலை மொழிபெயர்த்த மயிலை பாலு, ஜப்பானிய எழுத்தாளர் யோகோ ஒகாவாவின் நாவலை, 'நினைவுகளின் வேட்டைக்களம்' என்ற தலைப்பில் மொழிபெயர்த்த சி.லுபுனா லிலானி ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

