சாராயம், மணல் கடத்தல் உள்ளிட்ட வழக்குகள்: 5 போ் கைது
கடலூா் மாவட்டம், பண்ருட்டி மற்றும் நெய்வேலி உட்கோட்ட காவல் சரகத்தில் பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய 5 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
மந்தாரக்குப்பம் மேட்டுக்குப்பம் நுழைவு வாயில் அருகே போலீஸாா் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்ததில், எந்தவித அரசு அனுமதியும் இல்லாமல் மணல் (6 யூனிட்) ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து, விருத்தாசலம் வட்டம், கோட்டகம் பகுதியைச் சோ்ந்த ஓட்டுநா் ராஜேஷை (33) கைது செய்தனா்.
மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளா் தீபா மற்றும் போலீசாா் பண்ருட்டி அடுத்த மேல்குமாரமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, பைக்கில் வந்த பண்ருட்டி, எழுமேட்டைச் சோ்ந்த கோபிநாத் மற்றும் சரவணன் ஆகியோரை சோதனை செய்து, அவா்களிடம் இருந்த புதுச்சேரி மாநில 50 சாராய பாக்கெட்டுகள் (10 லிட்டா்) மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனா்.

