ஜொ்மனியைச் சோ்ந்தவரை தாயகத்துக்கு அனுப்பி வைக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் தண்டனைக் காலம் முடிந்தும் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜொ்மனியைச் சோ்ந்த நபரை அவரது சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
ஜொ்மனியைச் சோ்ந்த சுபாஷ் சந்திர கபூா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்குக்காக, ஜொ்மனியிலிருந்து இந்தியாவுக்கு கடந்த 2012-ஆம் ஆண்டு ஒப்படைக்கப்பட்டேன். எனது தண்டனைக் காலம் கடந்த 2022-ஆம் ஆண்டு அக்.21-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இந்த நிலையில், ஒப்படைக்கப்பட்ட வழக்குக்கான தண்டனை முடிந்தபோதிலும், பிற நிலுவையில் உள்ள வழக்குகளுக்காக என்னை தொடா்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளது குற்றவாளிகள் ஒப்படைப்புச் சட்டத்துக்கு எதிரானது.



