மணிப்பூரில் ஒருவர் சுட்டுக்கொலை! போலீஸ் விசாரணை
மணிப்பூரி ல்அடையாளம் தெரியாத நபர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது பற்றி....
மணிப்பூரி ல்அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிக் குண்டு காயத்துடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில், தலையில் துப்பாக்கிக் குண்டு காயத்துடன் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெள்ளிக்கிழமை சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
காலை 8 மணியளவில் போலீஸார் சடலத்தைக் கைப்பற்றியதாகவும், இதுகுறித்துத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரி தெரிவித்தார்.

