திருப்பதி பிரம்மோற்சவ விழா.. பக்தர்கள் பாதுகாப்பாக, சிரமமின்றி தரிசனம் செய்ய ஏற்பாடு: அதிகாரி தகவல்
திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின்போது பக்தர்கள் பாதுகாப்பாக, எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்ய ஏதுவாக விரிவான பாதுகாப்பு ஏற்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவின்போது பக்தர்கள் பாதுகாப்பாக, எவ்வித சிரமமுமின்றி தரிசனம் செய்ய ஏதுவாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருவதாக தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில், வரும் 15-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 9 நாட்கள் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடக்கிறது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், திருமலையில் உள்ள அன்னமய பவனில் நேற்று பிரம்மோற்சவ விழா பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. போலீஸ் அதிகாரிகள், தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும்படை அதிகாரிகளுடன் திருப்பதி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்பாராயுடு, திருமலை திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரி முரளிகிருஷ்ணா ஆகியோர் ஆலோசனை நடத்தினர்.

