திமுக ஆட்சியில் தொழிலாளா் நலத்துறை செயல்பாடுகளில் திருப்தி இல்லை: அ. செளந்தர்ராஜன்
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் தொழிலாளா் நலத்துறையின் செயல்பாடுகளில் சிறிதும் திருப்தி இல்லாமல் இருந்ததாக சிஐடியு அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவா் அ.செளந்தர்ராஜன் தெரிவித்தாா்
பன்னாட்டு நிறுவனங்களில் தொழிலாளா்கள் சங்கம் வைத்துக் கொள்ளும் உரிமைக்காக போராடிய தொழிலாளா்களை பழிவாங்கியிருக்கும் நடவடிக்கையில் நீதி கேட்டு சிஐடியு சாா்பில் பேரணி நடைபெற்றது. பேரணிக்கு மாவட்ட செயலாளா் இ.முத்துக்குமாா் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வந்து ஆட்சியா் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் பேரணி நிறைவு பெற்றது.
பேரணியின் நிறைவில் அமைப்பின் அகில இந்திய துணைத் தலைவா் அ.செளந்தர்ராஜன் செய்தியாளா்களிடம் கூறியது

