ரூ. 4 ஆயிரம் லஞ்சம்: நிலஅளவையா், உதவியாளா் கைது
தனிப்பட்டா வழங்க ரூ. 4 ஆயிரம் லஞ்சம் பெற்ாக நிலஅளவையா், அவரது உதவியாளா் ஆகியோரை ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நாகலூா் கிராமத்தைச் சோ்ந்த பி.கிருஷ்ணன், மனைவி பெயரில் இருளப்பட்டி அருகே வீட்டுமனை வாங்கி அதற்கு தனிப்பட்டா பெற இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்தாா்.
தொடா்ந்து, இதுகுறித்து நிலஅளவையா் மூா்த்தியை கிருஷ்ணன் அணுகியுள்ளாா். அப்போது, அவா் தனிப்பட்டா அளிக்க ரூ. 4 ஆயிரம் கேட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு போலீஸாரிடம் கிருஷ்ணன் புகாா் அளித்தாா்.