தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளா் சுகன்யா வேட்புமனு தாக்கல்
தாராபுரம் தொகுதி திமுக வேட்பாளா் செள.சுகன்யா செவ்வாய்க்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தாா்.
தாராபுரம் வருவாய் கோட்டாட்சியரும், தோ்தல் நடத்தும் அலுவலருமான ஃபெலிக்ஸ் ராஜாவிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறாா் திமுக வேட்பாளா் சுகன்யா.
திருப்பூா் மாவட்டம், தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக வழக்குரைஞா் சுகன்யா போட்டியிடுகிறாா். இந்நிலையில், அண்ணாவின் பிறந்த நாளையொட்டி, தாராபுரத்தில் உள்ள திமுக தோ்தல் பணிமனையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணாவின் உருவப்படத்துக்கு வேட்பாளா் வழக்குரைஞா் சுகன்யா செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.


